தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு பிரௌனி.., எப்படி செய்வது?
இந்த சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பிரௌனியை குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு பிரௌனி வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான அளவு
- சர்க்கரை வள்ளிக் கிழங்கு- 1
- பாதாம் மாவு- ½ கப்
- கோகோ பவுடர்- ¼ கப்
- தேன்- ¼ கப்
- வெண்ணெய்- 2 ஸ்பூன்
- முட்டை - 1
- வெனிலா எசென்ஸ் - ½ ஸ்பூன்
- பேக்கிங் பவுடர் - ½ ஸ்பூன்
- உப்பு - ஒரு சிட்டிகை
- டார்க் சாக்லேட்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக வேகவைத்து தோலுரித்து மசிந்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த சர்க்கரைவள்ளி கிழங்கு, தேன், உருகிய வெண்ணெய், முட்டை மற்றும் வெனிலா எசென்ஸை சேர்த்து நன்றாக கிளறவும்.
அடுத்து மற்றொரு பாத்திரத்தில் பாதாம் மாவு, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து சலித்த மாவை தயார் செய்த மாவு கலவையில் சேர்த்து, நன்கு கலக்கவும்.
இறுதியாக, டார்க் சாக்லேட் துண்டுகளை இந்த கலவையில் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும்.
இதனை அடுத்து ஒரு பேக்கிங் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, இந்த கலவையை ஊற்றவும்.
மைக்ரோவேவ் அவனில் 180°C-ல் 30 நிமிடங்கள் வேகவைத்து பின் குளிரவைத்தால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பிரௌனி தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |