தித்திக்கும் சுவையில் சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம்.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியாப்பத்தை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், குழந்தைகள் விருப்பி உண்ணும் சத்தான சர்க்கரை வள்ளிக்கிழங்கு இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரைவள்ளி கிழங்கு- 5
- அரிசி மாவு- 1 கப்
- உப்பு- 1 சிட்டிகை
- தேங்காய்- 1
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து நன்கு வேகவைத்துக்கொள்ளவும்.
பின் வேகவைத்த சர்க்கரைவள்ளி கிழங்கை தோலுரித்து நன்கு மசித்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இதனுடன் அரிசிமாவு, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து பிணைந்த மாவை இடியப்பம் போல் பிழிந்து அதன் மேல் தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ளவும்.
இறுதியாக இதனை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து எடுத்தால் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு இடியாப்பம் தயார்
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |