சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவர்: 15ஆண்டுகள் சிறை
Swiss knife attacker jailed for 15 years for stabbing children: சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய வெளிநாட்டவருக்கு 15ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் திகதி, சீன நாட்டவர் ஒருவர், சுவிட்சர்லாந்தின் சூரிக் நகரில், நர்சரி பள்ளிப் பிள்ளைகள் சிலரை கத்தியால் குத்தினார்.
15ஆண்டுகள் சிறை
அந்த நபர் தாக்கியதில், ஐந்து வயது சிறுவர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். சிலருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டதால், அவர்கள் தப்பிப் பிழைத்ததே பெரிய விடயம் என அப்போது கூறப்பட்டது.

திடீரென பிள்ளைகள் மீது ஒருவர் தாக்குதல் நடத்துவதை கவனித்த பிள்ளைகளை கவனித்துக்கொள்ளும் பணியாளர் ஒருவர், ஓடோடிச் சென்று அந்த நபரைத் தடுத்துள்ளார்.
இந்நிலையில், தற்போது 25 வயதாகும் அந்த நபருக்கு, சூரிக் நீதிமன்றம் ஒன்று 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன், அவர் கட்டாய மன நல ஆலோசனை பெறவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தண்டனைக்காலத்துக்குப் பின், சுவிட்சர்லாந்துக்குள் நுழைய அவருக்கு 15 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.