கருணைக்கொலை நிறுவனத் தலைவர்: சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்
நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேதனையில் தவிக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், கடைசியாக, நிம்மதியாக தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்காக நாடி வரும் இடம், சுவிட்சர்லாந்திலுள்ள எக்ஸிட் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்தவர் பெர்னார்ட் சட்டர் (58).
சுற்றுலா சென்றபோது நிகழ்ந்த துயரம்

எக்ஸிட் என்னும் கருணைக்கொலை நிறுவனத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்த சட்டர், சுவிட்சர்லாந்தின் சூரிக் மாகாணத்தில் வாழ்ந்துவந்தார்.
இந்நிலையில், தன் குடும்பத்துடன் ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்த சட்டர், செவ்வாய்க்கிழமை, ஜப்பானின் உயர்ந்த மலையான ஃபூஜி மலையில் ((Mount Fuji) மலையேற்றத்துக்குச் சென்றிருந்தார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,010 மீற்றர் உயரத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, திடீரென சட்டரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக, மருத்துவ உதவிக்குழுவினர் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சையளித்து, அவரை மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ஆனால், மருத்துவமனையில் சட்டரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரது மரணத்துக்கான காரணம் வெளியிடப்படவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |