மகளைக் கொன்ற குற்றவாளிக்கு சில நாட்கள் மட்டுமே தண்டனை: தாய் வருத்தம்
சுவிட்சர்லாந்தில், தன் மகளைக் கொலை செய்த அவளது சக மாணவி சில நாட்கள் மட்டுமே சிறையில் செலவிட இருக்கிறாள் என்பது தெரியவந்துள்ளதால், கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் தாய் வருத்தமடைந்துள்ளார்.
பள்ளித்தோழியைக் கொலை செய்த மாணவி
சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில், பள்ளியில் படித்துவந்த 15 வயது சிறுமி ஒருத்தியை அவளது சக மாணவியான 14 வயது சிறுமி ஒருத்தி கத்தியால் குத்திக் கொன்றாள்.
ஆனால், அவள் ஒரு சிறுமி என்பதால், அவளுக்கு தண்டனை விதிப்பதற்கு பதிலாக, அதிகாரிகள் அவளை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க இருக்கிறார்கள்.
தற்போது அவள் மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளாள்.
ஆக, தனது மகளைக் கொன்ற சிறுமிக்கு தண்டனை இல்லை. அதற்கு பதிலாக அவள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட இருக்கிறாள் என்பது தெரியவந்துள்ளதால், தான் கைவிடப்பட்டதாக உணர்வதாக அந்தத் தாய் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |