வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிக்கு உதவ மறுத்த சுவிஸ் அதிகாரிகள்: உயிரிழந்த குழந்தை

Switzerland
By Balamanuvelan Nov 23, 2024 09:16 AM GMT
Report

புலம்பெயர்ந்தோர் ஒருவரின் கர்ப்பிணி மனைவி வலியால் துடித்த நிலையிலும், சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவ மறுத்துள்ளனர்.

அவரது வயிற்றிலிருந்த குழந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், அவருக்கு இழப்பீடு வழங்க சுவிஸ் பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிப்பெண்

2014ஆம் ஆண்டு, இத்தாலியிருந்து பிரான்சுக்கு செல்வதற்காக புலம்பெயர்வோரான சிரிய நாட்டவர் ஒருவரும் அவரது மனைவியும் ரயிலில் பயணித்துக்கொண்டிருந்துள்ளனர்.

சுவிஸ் எல்லையில், அவர்களை சுவிஸ் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் வழிமறித்து, அவர்களையும் அவர்களுடன் வந்த 30 புகலிடக்கோரிக்கையாளர்களையும் திருப்பி இத்தாலிக்கே அனுப்பியுள்ளனர்.

இதற்கிடையில், இத்தாலிக்குச் செல்லும் ரயிலுக்காக Brig என்னும் நகரில் அவர்கள் சுமார் இரண்டரை மணி நேரம் காத்திருக்கும்போது, அந்தப் பெண் வலியால் துடித்துள்ளார்.

வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிக்கு உதவ மறுத்த சுவிஸ் அதிகாரிகள்: உயிரிழந்த குழந்தை | Swiss Officials Refuse Help Pregnant Migrant Pain

அந்தப் பெண்ணின் கணவரும் உதவி கோரி கண்ணீர் விட்டுக் கதறியும், சுவிஸ் பாதுகாப்புப்படையினர் அந்தப் பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம்.

அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக ஒரு ஆம்புலன்சைக் கூட அவர்கள் அழைக்கவில்லையாம்.

இத்தாலியை வந்தடைந்தபோது, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டிருக்கிறது.

இழப்பீடு வழங்க உத்தரவு

இந்த துயர சம்பவம் நீதிமன்றத்தை அடைந்த நிலையில், அந்தப் பெண்ணுக்கு 12,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்கியுள்ளது.

வலியால் துடித்த புலம்பெயர் கர்ப்பிணிக்கு உதவ மறுத்த சுவிஸ் அதிகாரிகள்: உயிரிழந்த குழந்தை | Swiss Officials Refuse Help Pregnant Migrant Pain

இந்நிலையில், நேற்று, அந்தப் பெண்ணின் கணவருக்கும் 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பீடு வழங்க சுவிஸ் பெடரல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Brigஇல் நடந்த விடயங்களால் அவர் நேரடியாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நீதிமன்றம், உதவி கிடைக்காமல் தனது மனைவி துடிதுடித்துக்கொண்டிருக்கும் காட்சியை அவர் காண நேர்ந்ததாகவும், அவரது மனோரீதியான தனியுரிமை மீறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US