பிரான்ஸ் ஜனாதிபதியின் அறிவிப்பொன்றால் பரபரப்பாகியுள்ள சுவிட்சர்லாந்து
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் அறிவிப்பு ஒன்று, அண்டை நாடான சுவிட்சர்லாந்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
பரபரப்பாகியுள்ள சுவிட்சர்லாந்து
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், அடுத்த G7 உச்சி மாநாடு பிரான்சிலுள்ள Evian என்னுமிடத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பரபரப்பு உருவாகியுள்ளது. பரபரப்புக்குக் காரணம் என்னவென்றால், 22 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 2003ஆம் ஆண்டு, இதே Evian நகரில் G7 உச்சி மாநாடு நடைபெற்றது.
Evian, சுவிஸ் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. மாநாட்டின்போது கலவரம் வெடிக்க, கலவரம் சுவிட்சர்லாந்துக்கும் பரவியது. அந்த கலவரத்தின்போது சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த சில வன்முறை சம்பவங்கள் சுவிஸ் வரலாற்றில் அழியா நினைவாக பதிந்துவிட்டன.
ஆக, மீண்டும் அதே Evian நகரில் மாநாடு நடைபெற உள்ளதால், மீண்டும் பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அந்த கலவரத்தின்போது மூத்த பொலிஸ் அதிகாரிகளாக இருந்தவர்களில் ஒருவரான Roger Golay என்பவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
கடந்த முறை நிகழ்ந்தபிரச்சினைகளை நன்கறிந்த அவர், மாநாட்டின்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், சேதங்கள் ஏற்பட்டால் அதற்காக இழப்பீடு வழங்குதல் ஆகிய விடயங்களை பிரான்ஸ் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஆளும் சுவிஸ் ஃபெடரல் கவுன்சிலை வலியுறுத்தியுள்ளார்.
இம்முறை, ட்ரம்புக்கு எதிரான போராட்டக்காரர்கள் பிரச்சினைகளை உருவாக்குவார்கள் என தான் அஞ்சுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அது குறித்து தாங்கள் பிரான்ஸ் அரசிடம் பேசியுள்ளதாகவும், ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுடன் இணைந்து பிரான்சும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டுவருவதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளதாகவும் சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த முறை பிரான்சிலுள்ள Evian நகரில் நடந்த G7 உச்சி மாநாட்டின்போது, சுவிட்சர்லாந்தில் நிகழ்ந்த கலவரங்களால், சுவிட்சர்லாந்துக்கு 40 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |