வார இறுதியில் முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள்
சுவிஸ் மக்கள், இந்த வார இறுதியில் சில முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.
முக்கியமான முடிவுகளை எடுக்க இருக்கும் சுவிஸ் மக்கள்
ஆம், இந்த வார இறுதியில்தான், சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள, சுவிட்சர்லாந்தின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு மேல் அதிகரிக்கக்கூடாது (No to 10 Million Switzerland) எனக்கூறும் பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

மக்கள் அந்த வாக்கெடுப்பு தொடர்பில் எடுக்கும் முடிவு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஏனென்றால், அந்த பிரேரணை புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அதாவது, நாட்டுக்குள் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் மக்கள்தொகையை பெருகவிடக்கூடாது என்னும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆக, அந்த பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு வெற்றி பெறுமானால், புலம்பெயர்தலும், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அது ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை பாதிக்கும்.
இன்னொரு முக்கிய வாக்கெடுப்பு, சுவிஸ் இளைஞர்கள் ராணுவத்தில் இணைவதா, அல்லது அதற்கு பதிலாக அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பதா என்பதைக் குறித்தது.
அதாவது, ராணுவத்தில் இணைய விருப்பம் இல்லாத சுவிஸ் இளைஞர்கள், அதற்கு பதிலாக அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

அப்படி அரசுப் பணிகளைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ராணுவத்துக்கு இணையாக கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பில் ஒரு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அத்துடன், ஜெனீவா மாகாணத்தில், மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்துகொள்வதற்கு தடை, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் திறந்திருப்பது தொடர்பான வாக்கெடுப்பு என பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் சுவிஸ் மக்கள் இந்த வார இறுதியில் முடிவு செய்ய இருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |