சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் இரண்டுவித பிரச்சினைகள்
கடந்த ஆண்டு, பல ஐரோப்பிய நாடுகளில் போதுமான பனிப்பொழிவு இல்லாததால், சுற்றுலாப்பயணிகள் வராமல் பனிச்சறுக்கு ரிசார்ட்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டது நினைவிருக்கலாம்.
சுவிஸ் சுற்றுலாத்துறை சந்திக்கும் பிரச்சினை
ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமான பிரச்சினை ஒன்றை எதிர்கொண்டுள்ளது சுவிட்சர்லாந்து.

ஆம், அதிக பனிப்பொழிவு காரணமாக பனிச்சறுக்கு ரிசார்ட்கள் மூடப்பட்டுள்ளன.
அதனால், முன்கூட்டியே முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பணம் தங்களுக்குத் திரும்பக் கிடைக்குமா என்ற கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.
இன்னொரு பக்கம், சூரிக் போன்ற சில மாகாணங்களில் உணவகங்கள் ஒரு பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன.
ஆம், முன்பதிவு செய்த பலர், உணவகங்களுக்கு வருவதில்லையாம். சில உணவகங்களில் முன்பதிவு செய்தவர்களில் 10 சதவிகிதமும் அதற்கு மேலான மக்களும் உணவகத்துக்கு வருவதில்லை என்கிறார் பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளர்.
சமீபத்தில், ஒரு மாலைப்பொழுதில், உணவகத்துக்கு வர முன்பதிவு செய்தவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உணவகத்துக்கு வரவில்லையாம்.

அதேபோல, இந்த ஆண்டு காதலர் தினத்தின்போதும் பலர் உணவகத்துக்கு வரவில்லை என்கிறார் அவர்.
110 இருக்கைகள் கொண்ட தனது உணவகத்தில் இந்த அளவுக்கு முன்பதிவு செய்தவர்கள் வரத்தவறுவதால், லாபம் கிடைப்பதற்கு பதிலாக, வரவும் செலவும் சரி என்னும் நிலை ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவிக்கிறார்.
ஆக, ஒன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் உணவகத்துக்கு வரத்தவறும் நிலையில், அத்தகையவர்களுக்கு 50 சுவிஸ் ஃப்ராங்குகள் கட்டணம் ஒன்றை அறிமுகம் செய்ய குறிப்பிட்ட உணவகம் திட்டமிட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |