சுவிட்சர்லாந்தில் மீண்டும் அமுலுக்கு வந்த சட்டம்! பெரும்பாலான மக்கள் ஆதரவு
சுவிட்சர்லாந்தில் மீண்டும் கோவிட்-19 சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவாக பெரும்பான்மையான மக்கள் வாக்களித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டதைப் போல, புதிய கோவிட்-19 சட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க நவம்பர் 28-ஆம் திகதி மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இன்று (திங்கட்கிழமை) இந்த வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள் வெளியான நிலையில், பெரும்பான்மையான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதாவது தற்போது நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கு ஆதரவாக 62 சதவீத வாக்குகளை வழங்கி சுவிஸ் குடிமக்கள் ஆதரவளித்துள்ளனர்.
அதனடிப்படையில், சுவிட்சர்லாந்தில் இயற்றப்பட்ட புதிய கோவிட் -19 சட்டத்தின்படி, தடுப்பூசி போடப்பட்டவர்கள், மீட்கப்பட்டவர்கள் அல்லது பரிசோதனையில் எதிர்மறையானவர்கள் மட்டுமே பொது நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள முடியும்.
Photo: Arnd Wiegmann/Reuters
இந்த வாக்கெடுப்பில், இரண்டு மாநிலங்கள் மட்டுமே இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. அவை, கிழக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Schwyz மற்றும் Appenzell Innerrhoden - இரண்டும் பழமைவாத கிராமப்புற பகுதிகள் என்று கூறப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில், Omicron வகை கொரோனா வைரஸால் முதல் நபர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது.
உலகை அச்சுறுத்தும் இந்த கொடிய வைரஸ் நாட்டிற்குள் நுழைந்துவிட்ட நிலையில், இந்த சட்டம் தொடர்ந்து நடைமுறைக்கு வந்தது நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்த உதவும் என நம்பப்படுகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022