மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் : இனி கவனமாக இருங்க!
மாரடைப்பு திடீரென ஏற்படாது. சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும்.
50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான இரத்தம் கிடைக்காத போது இது ஏற்படுகிறது.
எனவே மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முன்பே வெளிப்படும் சில அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும்.
அறிகுறிகள்,
- மிகுந்த சோர்வு
- தூக்கமின்மை
- மூச்சுவிடுவதில் சிரமம்
- பலவீனமான தசை
- மயக்கம் வருதல்
- வியர்வை அதிகரித்தல்
- மார்பகத்தில் ஓர் அசௌகரிய உணர்வு
- அடி வயிற்று வலி
- முடி உதிர்தல்
- சீரான இதய துடிப்பின்மை
- கால், பாதம் மட்டும் முழங்கால் வீங்கிப் போதல்
இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரை நாடினால் மாரடைப்பில் இருந்து சற்று பாதிப்பு குறையும் என்பது குறிப்பித்தக்கது.