சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் மாற்றம் ஏற்பட்டால்! அலட்சியம் வேண்டாம் இந்த பிரச்சினையாக இருக்கலாம்
மனித உடலில் மிக முக்கிய உறுப்பு கல்லீரல். சிக்கலான அமைப்பு கொண்ட நம் உடலில் கல்லீரலின் பங்களிப்பு அபரிதமானது. உடலுக்குத் தேவையான மொத்த சக்தியும் கல்லீரலிடமிருந்துதான் பெறப்படுகிறது.
கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம்
வயிறு உப்புசம்
கல்லீரல் பாதிப்பு உள்ளானவர்களுக்கு அடிக்கடி வயிறு உப்புசம் ஏற்படும். சிலருக்கு நிரந்தரமாக வயிறு வீக்கத்துடன் காணப்படும். கர்ப்பிணி பெண் தோற்றத்தில் காட்சியளிப்பர். கல்லீரல் இழை நார் வளர்ச்சியால் சிலருக்கு அடி வயிற்றில் நீர் கோர்த்துக்கொள்ளும்.
மஞ்சள் காமாலை
சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறினால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அது கல்லீரலை வெகுவாக பாதிக்கும். சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதால், இரத்தத்தில் பிலிரூபின் உண்டாகும். அதனால் உடலில் இருக்கும் கழிவு வெளியேற முடியாது.
வயிற்று வலி
வயிற்று வலி, அதுவும் மேல் வயிற்றின் வலது புறத்தில் வலி எடுக்கும் போது அல்லது விலா எலும்பு கூட்டின் அருகே அடி வயிற்று பகுதியின் வலது புறத்தில் வலி எடுத்தால், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருக்கலாம்.
சிறுநீரில் மாற்றங்கள்
உடலின் இரத்த ஓட்டத்தில் பிலிரூபின் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகத்தின் நிறம் கடும் மஞ்சளாக மாறும். அதற்கு காரணம் பாதிக்கப்பட்ட கல்லீரலால், சிறுநீரகம் மூலம் கழிவுகளை வெளியேற்ற முடிவதில்லை.
சரும எரிச்சல்
சருமத்தில் எரிச்சல் ஏற்பட்டு, அது தொடர்ந்து கொண்டே இருந்து, நாளடைவில் சொறி, சிரங்கு என மாறிவிட்டால் அதுவும் கூட கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான ஒரு அறிகுறியே.
மலம் கழிப்பதில் மாற்றங்கள்
கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால் மலங்கழித்தலிலும் பல மாற்றங்கள் ஏற்படும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மலச்சிக்கல், மலங்கழித்தலின் போது எரிச்சல், மலத்தின் நிறம் மங்குதல் அல்லது மலத்தின் நிறம் கருமையாகுதல் அல்லது மலத்தில் இரத்த திட்டுக்கள் வருதல் போன்றவைகளை சொல்லலாம்.