இந்த அறிகுறி இருந்தா உங்க உடம்புல அதிகமா பித்தம் இருக்குனு அர்த்தமாம்! கவனமாக இருங்க
மனிதனுக்கு வரும் வியாதியை மூன்று விதமாக பிரிகிறது வாதம், பித்தம், கபம் ஆகியவை. இந்த மூன்றும் பஞ்சபூதங்களோடு தொடர்பு உடையவை. பூமியும் தண்ணீரும் சேர்ந்தது கபம். காற்றும் ஆகாயமும் சேர்ந்தது வாதம்.
நெருப்பு என்பது தான் பித்தம். இந்த மூன்றும் ஒரு மனிதனுக்கு சம நிலையில் இருந்தால் அந்த மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதிலும் பித்த தோஷம் உடல், மனம் மற்றும் ஆன்மாவில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
இது வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்க கூடியது. அதில் உடலில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
பித்த தோஷத்தின் ஏற்றத்தாழ்வுகள் சில அறிகுறிகளை உணர்த்தும். அவை என்ன என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது ஆகும். தற்போது அவற்றை பார்ப்போம்.
- உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் உடலில் ஒருவித எரிச்சலை உணர்வீர்கள். சிலருக்கு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் திடீரென்று எரியும் உணர்வு உண்டாகும். சிலருக்கு கால்கள், உள்ளங்கைகளில் எரிச்சல் உணர்வு இருக்கும்.
- தாகமும் பசியும் பித்த தோஷத்துடன் தொடர்பு கொண்டது என்பதால் இதை தொடர்ந்து செரிமான பிரச்சனைகளும் சந்தித்தால் அது பித்த தோஷத்தின் அறிகுறிகள் ஆகும். இது இருக்கும் போது பசியையும் தாகத்தையும் உணர்ந்துகொண்டே இருப்பீர்கள்.
- பித்தம் ஏற்றம் இறக்கம் இருக்கும் போது உண்டாகும் அறிகுறியில் தூக்கமின்மை ஒன்றாகும்.
- அடிக்கடி காய்ச்சல் வெப்பநிலை அதிகரிப்பு எதிர்கொண்டால் அது பித்த தோஷத்தின் அறிகுறியாக இருக்கலாம்.
- பித்த தோஷத்தில் ஏற்ற இறக்கம் இருந்தால் அது கடினமான வெப்பத்தை உடலில் உண்டாக்கும். பித்த ஏற்றத்தாழ்வு இருப்பவர்கள் நீண்ட நேரம் வெப்பத்தை தாங்கி இருக்க முடியாது. வெந்நீர் குடிப்பதை எப்போதும் விரும்பமாட்டீர்கள்.
- உடலில் பித்ததோஷம் அதிகமாக இருந்தால் வெளிப்படும் வியர்வை ஒருவித துர்நாற்றத்தை வெளியிடக்கூடும்.
- உடலில் பித்த தோஷம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அது முன்கூட்டிய நரையை உண்டாக்கும். இவையும் உடலில் பித்த தோஷத்துக்கான அறிகுறியே ஆகும்.
- பித்தம் அதிகரிக்கும் போது தோல், கண்கள், சிறுநீர் மலம் போன்றவை மஞ்சள் நிறத்தில் இருக்கும். உடலில் சிவந்து வெளிறிய தன்மை உண்டாகும்.
- பித்தம் அதிகரிக்கும் போது காயங்கள் உண்டானால் அது அந்த இடத்தில் சீழ் அல்லது கசிவை உண்டாக்க செய்யும். பித்தம் ஏற்றம் இறக்கம் தன் மஞ்சள் காமாலையை உண்டு செய்யும்.