பிரித்தானியாவில் அதிகரிக்கும் RSV வைரஸின் அறிகுறிகள் என்னென்ன? அதில் இருந்து மீள்வது எப்படி? எச்சரிக்கை தகவல்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் ஆர்.எஸ்.வி வைரஸின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா, தற்போது தடுப்பூசி மூலம் அதன் பாதிப்பை பெருமளவு குறைத்துள்ளது.
இதன் காரணமாக பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கவுள்ளார். இதைப் பற்றிய அறிவிப்பு வரும் 19-ஆம் திகதி திங்கட் கிழமை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பிரித்தானியாவில், டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி வலியுறுத்தப்படுகிறது.
இதற்கிடையில், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கபடவுள்ளதால், RSV வைரஸ் பாதிப்பு குறித்த எச்சரிக்கை வந்துள்ளது. வரும் இந்த குளிர்காலத்தில், RSV பாதிப்புடன் 60,000 பேர் காய்ச்சலால் இறப்பதையும், 40,000 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை பார்க்க முடியும் என்று Academy of Medical Sciences-ன் சுகாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு சாதாரண ஆண்டில் காணப்படும் இறப்புகளை விட இரட்டிப்பாக இருக்கலாம் , வழக்கத்தை விட, 10,000 குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
RSV என்றால் என்ன?
இது ஒரு சுவாச ஒத்திசைவு வைரஸ், பொதுவான சுவாச வைரஸ் என்று சொல்லலாம். இது குளிர் போன்ற அறிகுறிகளை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இந்த சுவாச வைரஸால் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை மட்டுமே அதிகம் பாதிக்கப்படுவர்.
அதாவது, 12 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள், மூச்சுக்குழாய் அழற்சி (நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப்பாதைகளின் வீக்கம்) மற்றும் நிமோனியா (நுரையீரல் தொற்று) ஆகியவற்றால் பாதிக்கப்படுவர்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் (OVG) கருத்துப்படி, ஒவ்வொரு ஆண்டும் RSV-வியிலிருந்து சுமார் 83 குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இறப்பதாக குறிப்பிடுகிறது.
இதில் இருக்கும் இந்த எண்ணிக்கை வயதான பெரியவர்களில் 8,000-ஆக இந்த முறை உயர்கிறது. இருப்பினும், RSV வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்படும் குழந்தைகளின் விகிதம் சுமார் 3 மட்டுமே உள்ளதாக OVG கடந்த 2017-ஆம் ஆண்டு தெரிவித்துள்ளது.
RSV-ன் அறிகுறிகள் என்ன?
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுமார் நான்கு முதல் ஆறு நாட்களுக்குள் அறிகுறிகளைக் பெறுவார்கள்.
- மூக்கு ஒழுகுதல்
- பசியின்மை
- இருமல்
- தும்மல்
- காய்ச்சல்
- மூச்சுத்திணறல்
இது தற்போது பரவும் கொரோனா வைரஸ் பரவலுடன் ஒத்து இருப்பதால், இதை வேறுபடுத்தி கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இதனால், காய்ச்சல் மற்றும் RSV ஆகியவற்றுக்கான சோதனைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
பொது சுகாதார இங்கிலாந்து, நல்ல காற்றை சுவாசிப்பது, அடிக்கடி கை கழுவுவது போன்றவற்றின் மூலம் இந்த நோயின் பரவலை குறைக்க முடியும் என்று கூறுகிறது.
இந்த நோய்க்கு சிகிச்சையளிப்பது எப்படி?
இந்த நோய்க்கு தடுப்பூசி பயன்படுத்தப்பட்டாலும், இதற்கு என்று ஒரு தனி சிகிச்சை எதுவும் இல்லை, பெரும்பாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டால், 15 நாட்களுக்குள் தானாகவே போய்விடும்.
இதில் இருந்து நம்ப்பை காத்து கொள்ள, ibuprofen போன்ற வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
பிரித்தானியாவில் இப்போது இது ஏன் அதிகரித்து வருகிறது?
கடந்த குளிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் காரணமாக, இதன் பாதிப்பு குறைவாக இருந்தது.
தற்போது மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், இந்த ஆண்டு வழக்கத்தை விட இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதனால் இதை எதிர்கொள்வதற்கு NHS தயாராகி வருகிறதாம்.