மீண்டும் கிரிக்கெட் போட்டியில் களமிறங்கும் ஜாம்பவான்கள் சச்சின், சேவாக், கெயில்! உற்சாகத்தில் ரசிகர்கள்
ஜாம்பவான்கள் சச்சின், சேவாக், கெய்ல் ஆகியோர் பங்கேற்கும் புதிய கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த டி20 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் எனவும் , மேலும் சில பிரபல கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த முடிந்த, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விரேந்தர்சேவாக், இலங்கையின் அர்னால்டு போன்றவர்கள் பங்கேற்றனர்.
அதன்பிறகு, இவர்கள் இனி எப்போது ஒன்றாக இணைந்து கிரிக்கெட் விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் சச்சின், சேவாக், கெய்ல் போன்றவர்கள் பங்கேற்கும் புதிய டி10 கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் 2022ஆம் ஆண்டு ஜனவரி 11 முதல் 15ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதில் பங்கேற்கும் மற்ற வீரர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.