கேப்டன் பதவியில் இருந்து விலகும் கோலி? எடுத்த திடீர் முடிவு: கசிந்த முக்கிய தகவல்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விராட் கோலியே டி20 கிரிக்கெட் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகுவார் என்று ஒரு தரப்பும், அப்படி இல்லாவிட்டாலும் ரோகித் சர்மாவே கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
காரணம் ரோகித் சர்மாவின் ஐபிஎல் வெற்றிகள் மற்றும் இந்திய டி20 அணிக்காக கோலி இல்லாத போது ரோகித் சர்மா பிரமாதமாக சிலபல வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இலங்கையில் நடைபெற்ற நிதாகஸ் டிராபி ஒரு எடுத்துக் காட்டு.
மேலும் கோலி தன் பேட்டிங்கில் கவனம் செலுத்தப் போவதாகவும் அதற்கு கேப்டன்சி சுமை இடையூறாக இருப்பதாகவும் கருதுவதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து முன்னணி ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் பிசிசிஐ வட்டாரத்தை மேற்கோள் காட்டி கூறப்பட்டிருப்பதாவது, விராட் கோலியே இந்த அறிவிப்பை வெளியிடுவார்.
பேட்டிங்கில் கவனம் செலுத்த விரும்புகிறார் கோலி, தன்னுடைய பழைய பார்மை மீட்க அவர் இந்த முடிவுக்கு வருவார் என்றும் உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்ற தன் பழைய நிலையை எட்டவே அவர் விரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது.