ஐபிஎல் தொடரில் ருத்ர தாண்டவ ஆட்டம்: இந்திய அணித்தலைவராகும் வீரர்
பஞ்சாப் கிங்ஸ் அணித்தலைவராக சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் தலைவராகும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2025 தொடரில் மிரட்டலாக செயல்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப்போட்டி வரை வந்தது.
இதன்மூலம் ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் அணித்தலைவர் என்னும் பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
அத்துடன் அவர், இந்த சீசனில் துடுப்பாட்ட வீரராகவும் சிறப்பாக விளையாடி 604 ஓட்டங்கள் குவித்து மிரட்டினார்.
இதேபோல் சமீபத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கிண்ணம், சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து தொடர்களிலும் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
அணித்தலைவராகும் வாய்ப்பு
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கான தலைவராகும் வாய்ப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் குறிப்பாக, ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் தலைவராகவும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
கேப்டன்சி மற்றும் துடுப்பாட்டம் என இரண்டிலும் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய தேர்வுக்குழுவை ஈர்த்துள்ளார் என்று குறிப்பிடுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |