மீண்டும் ஒரு பயங்கரம்! இரயில் நிலைய வாசலில் இளம் பெண்ணை குத்திக் கொன்ற இளைஞனின் திடுக் வாக்குமூலம்

Murder Chennai Love TamilNadu
By Kaviarasan Sep 24, 2021 07:30 AM GMT
Report

தமிழகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் இரயில் நிலைய வாசலில் இளைஞர் ஒருவரால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியாகியுள்ளது.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர்சுவேதா. இவர் தந்தை பேருந்து ஓட்டுனராக உள்ளார். சுவேதா தாம்பரத்தில் இருக்கும் எம்.சி.சி கல்லூரியில் பட்டயபடிப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று தோழிகளுடன் வெளியே வந்த போது, அவருடைய ஆண்பர் எனப்படும் ராமச்சந்திரன் வழி மறித்து சுவேதாவிடம் பேசியுள்ளார்.

அப்போது நான் போன் செய்தால் ஏன் என் அழைப்பை எடுக்கமால் இருக்கிறார்? அதுமட்டுமின்றி உன் போன் பிசியாகாவே இருக்கிறதே என்று கேட்டுள்ளார். அதற்கு சுவேதா நான் தோழியிடம் பேசிக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு பயங்கரம்! இரயில் நிலைய வாசலில் இளம் பெண்ணை குத்திக் கொன்ற இளைஞனின் திடுக் வாக்குமூலம் | Tambaram Man Stabed With Lover Dead

இருப்பினும் அவர் கூறியதில் சந்தேகம் அடைந்த அவர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்மூடித்தனமாக குத்தினார்.

இதில் சுவேதா சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார். அதன் பின் ராமச்சந்திரனும், கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இது குறித்த தகவல் உடனே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இறந்து கிடந்த சுவேதாவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ராமச்சந்திரனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து பொலிசார் அவனிடம் விசாரித்த போது, கடந்த 2019-ஆம் ஆண்டு சுவேதா தன்னுடைய விடுமுறை நாளை கழிப்பதற்காக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு ரெயிலில் சென்றுள்ளார்.

மீண்டும் ஒரு பயங்கரம்! இரயில் நிலைய வாசலில் இளம் பெண்ணை குத்திக் கொன்ற இளைஞனின் திடுக் வாக்குமூலம் | Tambaram Man Stabed With Lover Dead

அப்போது தான் ராமச்சந்திரனின் அறிமுகம் கிடைத்துள்ளது. இரயிலில் இருவரும் பேசிக் கொண்ட போது, தன்னை போர்டு நிறுவன ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ராமச்சந்திரன், சுவேதாவுடன் நட்புடன் பழகியுள்ளார்.

எதேச்சையாக 3 முறைக்கும் மேலாக இதே போல ரெயிலில் சந்தித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இடையில் வந்த கொரோனா ஊரடங்கால் ஊருக்கு செல்ல இயலாமலும், நேரில் சந்திக்க முடியாமலும் இருவரும் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர். இரவு நேரங்களில் தினமும் ராமச்சந்திரனிடம் மணிக்கணக்கில் பேசிவந்த சுவேதா, சமீபநாட்களாக பேசுவதை குறைத்துக் கொண்டு வந்துள்ளார்.

ராமச்சத்திரன் அழைக்கும் நேரத்தில் சுவேதா வேறு காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், தனது கால் வெயிட்டிங்கில் இருந்தாலும் ராமச்சந்திரன் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இது குறித்து சந்தேகத்துடன் ராமச்சந்திரன் கேட்டதால், சுவேதா அவருடன் பேசுவதையே முழுவதுமாக நிறுத்திக் கொண்டுள்ளார்.

இதனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறி, சுவேதாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளான் ராமச்சந்திரன்.

மீண்டும் ஒரு பயங்கரம்! இரயில் நிலைய வாசலில் இளம் பெண்ணை குத்திக் கொன்ற இளைஞனின் திடுக் வாக்குமூலம் | Tambaram Man Stabed With Lover Dead

ஆனால் சுவேதா சந்திக்க மறுத்துள்ளார். ஏற்கனவே, போர்டு நிறுவன ஊழியர்கள் வேலையிழப்பு போராட்டம் போன்ற மன உளைச்சலோடு இருந்த ராமச்சந்திரனுக்கு, காதலியும் தன்னை ஏமாற்றிவிட்டதாக உண்டான ஆத்திரத்தால் அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு ராமச்சந்திரன் கல்லூரிக்கு சென்றுள்ளார்.

அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, சுவேதா கல்லூரியை விட்டு வந்ததும் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

பொலிசார் தற்போது ராமச்சந்திரனை கைது செய்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை நேரில் கண்ட அவரது தோழிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த சுவாதி என்ற இளம்பெண் சரமாரியாக வெட்டப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

கொலைக் குற்றவாளியாக ராம்குமார் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். இச்சூழலில் மீண்டும் இதுபோல ஒரு கொலை சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US