தைவான் நாட்டு பெண்ணை திருமணம் செய்த தமிழர்! ஜப்பானில் மலர்ந்த காதல்
தமிழருக்கும், தைவான் பெண்ணுக்கும் ஜப்பானில் மலர்ந்த காதல்
பெற்றோரின் சம்மதத்துடன் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட ராஜேந்திரன் - சியாங் ஷியா ஜோன்
தமிழக மாவட்டம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர் தைவான் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஆவத்துவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஜப்பானில் உள்ள கொயோட்டோ பல்கலைக் கழகத்தில் பணி புரிந்து வருகிறார்.
அதே பல்கலைக் கழகத்தில் தைவானைச் சேர்ந்த சியாங் ஷியா ஜோன் என்ற பெண்ணும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அறிவியல் ஆராய்ச்சியாளரான ராஜேந்திரனுக்கும், சியாங் ஷியா ஜோனுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரும் தங்கள் வீட்டில் காதல் குறித்து தெரிவித்துள்ளனர். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே திருமணம் முடிவானது.
அதன்படி காவேரிப் பட்டணத்தில் உள்ள திருக்கோயில் ஒன்றில் இவர்களின் திருமணம் நடந்தது. மணமக்களுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.