RCB அணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: CSK குறித்து கூறியுள்ள முக்கிய விடயம்!
IPL 2025ம் ஆண்டுக்கான சாம்பியன் கோப்பை வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
RCB அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து
இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஆர்சிபி அணி கோப்பையை வென்றதற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு வாழ்த்துக்கள். இந்தக் கனவை பல ஆண்டுகளாக சுமந்து வந்த கிங் கோலிக்கு இந்தக் கிரீடம் பொருத்தமானது. என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Well done, @RCBTweets! A thrilling end to a season full of surprises.@imVkohli, you have carried this dream for years and tonight, the crown truly suits you. #KingKohli 👑
— M.K.Stalin (@mkstalin) June 3, 2025
Expecting a strong comeback from @ChennaiIPL next season.#IPLfinal #IPL2025 #RCBvPBKS pic.twitter.com/sOLvpS21rU
அடுத்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றும் பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |