அதிகரிக்கும் கொரோனா! தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமுல்: வெளியான முழு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது.
இதனால் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு விதிகள் கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதில், வரும் 20-ஆம் திகதி முதல் இரவு 10 மணி வரை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
ஏப்ரல் 20-ஆம் திகதி முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமுலில் இருக்கும். இரவு நேர ஊரடங்கின் போது தனியார் பொது போக்குவரத்து ஆட்டோ, டாக்ஸிக்கு அனுமதி இல்லை.
மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி போன்றவை அனுமதிக்கப்படும். பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும். தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு ஒதிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது