மலர்ந்திருக்கும் புத்தாண்டில் அமைதியும் மகிழ்ச்சியும் உருவா கவேண்டும்: டொராண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வாழ்த்து
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கனடாவின் டொராண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் Marci Ien தமது வாழ்த்துகளை தெரியப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், “உலகத் தமிழர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள், மலர்ந்திருக்கும் இப்புத்தாண்டு, அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வெற்றியை அளிக்கட்டும்.
அதுமட்டுமின்றி கொரோனா பாதிப்பால் அவதியுறும் அனைவரையும் நினைவில் கொண்டு, மனதார வேண்டுவதாகவும் Marci Ien தெரிவித்துள்ளார்”.
மேலும், இந்த இக்கட்டான சூழலில் நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் எனவும் அவர் தமது புத்தாண்டு வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.