தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? இன்னும் 2 நாள் இருக்கும் நிலையில்... exitpoll கருத்து கணிப்பு வெளியானது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்பது குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ஆம் திகதி 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 71.43 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில், அதிமுக 179 தொகுதிகளிலும், பாட்டாளி மக்கள் கட்சி 23 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும், தமிழ் மாநில காங்கிரசு 6 தொகுதிகளிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம் மற்றும் பசும்பொன் தேசிய கழகம் ஆகியவை தலா 1 தொகுயிலும் போட்டியிட்டன.
அதே போன்று, ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணியில், திமுக 173 தொகுதிகளிலும், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும், மனித நேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், பார்வார்ட் பிளாக் கட்சி, தமிழக வாழ்வு உரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை ஆகியவை தலா 1 தொகுதியிலும் போட்டியிட்டன.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 2-ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ABP-Cvoter Exit Poll Results 2021 கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
அதில், திமுக கூட்டணி 166 தொகுதிகளிலுன், அதிமுக 64 இடங்களிலும் வெற்றி பெறும் எனவும், மக்கள் நீதி மய்யம் ஓரிடத்திலும், அமமுக ஒரு தொகுதியிலும், மற்றவை 2 இடங்களிலும் வெற்றி பெறும் எனக்கூறப்பட்டுள்ளது.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி திமுக ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.