நீதிபதி வீட்டிற்கு திருட சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! பக்கத்து வீட்டில் திருடிச் சென்ற சம்பவம்
தமிழகத்தில் நீதிபதி வீட்டிற்கு கொள்ளையடிக்கு புகுந்த கொள்ளையன் அருகில் இருந்த மூன்று வீடுகளுக்குள் புகுந்து நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் நகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சார்பு நீதிமன்ற சுவேதரன்யன் என்பவர் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இவர் நீதிமன்றம் அருகே உள்ள பிருந்தாவன் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவரது வீட்டிற்கு வந்த திருடன் பின்பக்க கதவை உடைக்க முயன்றுள்ளான். இந்த சத்தம் கேட்டு வீட்டின் வெளிப்புற மின்விளக்குகளை வீட்டின் உள்ளே இருந்தவர்கள் போட்டதும், அதிர்ச்சியடைந்த திருடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளான்.
அதன் பின், நீதிமன்றம் அருகே வசிக்கும் அர்ஜுனன் வீட்டிற்குள் புகுந்த அந்த திருடன், அர்ஜுனன் மனைவி அணிந்திருந்த தாலிக்கொடி, கழுத்து செயின் உட்பட 9 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளார்.
அந்த பெண், சத்தம்போட்டு கத்துவதற்குள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து தப்பியோடியுள்ளான்.