தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு! என்ன சின்னம் தெரியுமா?
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் முடுக்கி விட்டுள்ளன.
இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் அணையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் தான் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் ஊரக உள்ளாட்சித் தேர்தலையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொது சின்னமாக #விவசாயி சின்னத்தை உறுதிசெய்துள்ளது தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம். pic.twitter.com/ITTPkqDtgi
— நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@NaamTamilarOrg) September 21, 2021