பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி!

India Marriage Madurai TamilNadu
By Kaviarasan Jun 12, 2021 01:50 AM GMT
Report

தமிழகத்தில் பள்ளிக்கும் செல்லும், மாமன் மகளை திருமணம் செய்து கொண்ட இளைஞர் ஒருவர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிக்குமார். 27 வயது மதிக்கத்தக்க இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்தார்.

ஆயுதப் படையில் இருந்து சென்னை, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரிந்து வந்த பழனிக்குமார். தற்போது குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு டிரைவராக இருந்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 17-ஆம் திகதி பழனிக்குமார், தன்னுடைய மாமன் மகளை மதுரையில் இருக்கும் சமயநல்லூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதன் பின்,  இவர் தனது புது மனைவியுடன் சென்னை மாதவரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.

அப்போது, குழந்தைகள் நல அமைப்புக்கு பழனிக்குமார், திருமணம் செய்து கொண்டது ஒரு மைனர் குழந்தை, அவருக்கு இன்னும் 18 வயது பூர்த்தி ஆகவில்லை. இது ஒரு குழந்தை திருமணம் என்று புகார் சென்றுள்ளது.

பள்ளி செல்லும் மாமன் மகளை குடும்ப கௌரவத்திற்காக திருமணம் செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி! | Tamilnadu Police Man Marriage School Girl

இதையடுத்து, இது தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதன்பேரில் விசாரித்த போது குடும்ப கவுரவத்துக்காக  நடத்தப்பட்ட குழந்தை திருமணம் என்பது தெரியவந்துள்ளது.

பழனிகுமாரின் மாமன் மகள் பள்ளி ஒன்றில் படித்து வந்த நிலையில் வேறொருவரை காதலித்துள்ளார்.  இந்த விஷயத்தை தெரிந்த பெண்ணின் பெற்றோர், அவர் காதலனை திருமணம் செய்து கொண்டால் குடும்ப கவுரவம் பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோரும் உறவினர்களும் சேர்ந்து அந்த சிறுமியை பழனிகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

வேறு வழியின்றி பழனிக்குமாரும், குடும்பத்தினரின் கட்டாயத்தின் பேரில் தனது மாமன் மகளான சிறுமியை திருமணம் செய்து கொண்டு சென்னை அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதனால் 17 வயது மைனர் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக பழனிக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்கு பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US