உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி? முதல்வர் ஸ்டாலினுக்கு குஷ்பு கேள்வி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவத்துள்ள நிலையில் இதற்கு பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்துவருகிறது.
இதனிடையே, வரும் 14-ம் தேதியுடன் அமலில் உள்ள ஊரடங்கு நிறைவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் வரும் 14-ம் திகதி முதல் ஜூன் 21-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் வரும் 15-ம் திகதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக பிரமுகரும், நடிகையுமான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டதாவது, எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது டாஸ்மாக்கா. ஆஹா !! என்ன ஒரு சிந்தனை !!
#tasmac is far more important than everything else. Wow!! What a thought!! உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி??pls answer us மாண்புமிகு முதல் அமைச்சர் thiru @mkstalin அவர்கள்..
— KhushbuSundar ❤️ (@khushsundar) June 11, 2021
உங்களுக்கு வந்தா அது இரத்தம் எங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னி?
தயுவு செய்து பதில் சொல்லுங்கள் மாண்புமிகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.