ஜேர்மனியில் பயங்கரம்! டேட்டிங் தளம் மூலம் பழகிய நபரை துண்டு துண்டாக வெட்டி தின்ற ஆசிரியர்: குலை நடுங்க வைக்கும் சம்பவம்
ஜேர்மனியில் ஆசிரியர் ஒருவர் டேட்டிங் தளம் மூலம் பழகிய நபரை கொன்று துண்டு துணடாக வெட்டி தின்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து நடுங்க வைத்துள்ளது.
தலைநகர் பெர்லினிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 41 வயதான ஆசிரியர் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி ஜேர்மனி செய்தி நிறுவனமான DPA வெளியிட்ட தகவளின் படி, கைது செய்யப்பட்ட 41 வயதான ஆசிரியர் டேட்டிங் இணையதளம் மூலம் 43 வயதான மெக்கானிக் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஆசிரியர் பெர்லினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு மெக்கானிக்கை வரவழைத்தாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து மெக்கானிக்கை கொன்று துண்டு துண்டாக வெட்டிய ஆசரியர், சில உடல் பாகங்களை தின்றுள்ளார்.
மீதமுள்ள உடல் பாகங்களை நகரில் பல்வேறு பகுதிகளில் வீசியதாக கூறப்படுகிறது.
காணாமல் போன மெக்கானிக்கை தேடி வந்த பொலிசார், பெர்லினில் உள்ள காட்டுப் பகுதியில் மனித எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளி ஆசிரியரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெர்லின் நீதிமன்றத்தில் தொடங்கியது, விசாரணை அக்டோபர் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு ஆண்களின் பெயர் வெளியிடப்படவில்லை என வழக்கறிஞர்கள் கூறினர்.