பள்ளி ஆசிரியரை துரத்தி துரத்தி அடித்த 2ஆம் வகுப்பு மாணவியின் பெற்றோர் கைது!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆம் வகுப்பு மாணவியின் அடித்த ஆசிரியரைப் பெற்றோர் அடித்ததால் கைது செய்யப் பட்டுள்ளனர்.
மாணவியை அடித்த ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழநம்பியாபுரம் கிராமத்தில் இந்து தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு 1 முதல் 5 வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக குருவம்மாள் உட்பட சில ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
[EE4J}@polimer
இதே பகுதியைச் சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசிரியர் பரத் அடித்து கண்டித்திருக்கிறார். உடனே அந்த சிறுமி தனது பெற்றோரிடம் போய் சொல்லியிருக்கிறது.
செருப்பால் அடித்த தாய்
இதனை கேட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர் எதற்காக தன் பிள்ளையை அடித்தீர்கள் என மிரட்டியிருக்கிறார்கள்.
அப்போது அங்கிருந்த தலைமை ஆசிரியர் குருவம்மாள் அதனை தனது போனில் வீடியோ எடுத்துள்ளார்.
அந்த சமயம் ஆசிரியரை மாணவியின் தாய் தன் குழந்தையை அடித்ததாக கூறி ஒருமையில் திட்டியுள்ளார்.
அப்போது உள்ளே வந்த மாணவியின் தந்தை சரமாரியாக ஆசிரியர் பரத்தை தாக்கியுள்ளார். இதனை வீடியோ பிடித்துக் கொண்டே குருவம்மாள் அவரை தடுக்க முயன்றுள்ளார்.
@polimer
வெளியே ஓடிய ஆசிரியர் பரத்தை துரத்திப் பிடித்து மாணவியின் தந்தை அடிக்க, அவரது தாய் தன் செருப்பை கழற்றி அவரை அடிப்பது குருவம்மாள் பதிவு செய்த வீடியோவின் மூலம் உறுதியாகியுள்ளது.
குருவம்மாள் அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க மாணவியின் தாய் உட்பட அவரது தந்தை மற்றும் மாணவியின் தாத்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.