மகளின் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடூரம்!
ஆசிரியர் ஒருவர் தனது மனைவியை குத்தி கொலை செய்ததால் பரபரப்பு
தன் கண் முன்னே தாய் கொலை செய்யப்பட்டதால் உறைந்துபோன 9 வயது மகள்
இந்திய தலைநகர் புதுடெல்லியில் மகள் கண் முன்னே தனது மனைவியை ஆசிரியர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லியில் நவாடா பகுதியில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் நபர் ஒருவர், தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.
இருவருக்கும் இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் ஆசியருக்கும், அவரது மனைவிக்கும் நேற்று மாலையும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பெற்றோரின் சண்டையால் அவர்களது 9 வயது மகள் பதறிப் போயிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆசிரியர் , தனது மனைவியை மகள் கண் முன்னேயே கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அதற்குள் குறித்த பெண் உயிரிழந்துவிட்டார்.
அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய ஆசிரியரை தேடி வருகின்றனர்.