பிரான்சில் உதவி ஆசிரியைக்கு மாணவனால் நேர்ந்த துயரம்
பிரான்சில், உதவி ஆசிரியை ஒருவர் ஒரு மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
உதவி ஆசிரியைக்கு மாணவனால் நேர்ந்த துயரம்
வடகிழக்கு பிரான்சிலுள்ள Françoise Dolto school என்னும் பள்ளியில் உதவி ஆசிரியையாக பணியாற்றிவந்தார் மெலானி G (31) என்னும் பெண்.
நேற்று காலை, மாணவர்கள் பள்ளிக்கு ஆயுதங்கள் போன்ற விடயங்களைக் கொண்டு வருகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்காக, அவர்களுடைய பைகளை சோதனையிடும் பணியில் ஈடுபட்டிருந்தார் மெலானி.
அப்போது, 14 வயது மாணவன் ஒருவன் மெலானியை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளான்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட மெலானி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். மெலானிக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ள நிலையில், பிரான்ஸ் பிரதமரான இமானுவல் மேக்ரான் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |