லண்டனுக்கு படிக்க வந்த இளைஞனுக்கு நேர்ந்த நிலை! காப்பாற்ற போராடிய ஆசிரியர்: பரிதாப பின்னணி
லண்டனில் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய 18 வயது இளைஞனை ஆசிரியர் ஒருவர் காப்பாற்ற முயன்ற நிலையில், அந்த இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தென் மேற்கு லண்டனின் Twickenham-பகுதியில் இருக்கும் Richard Upon Thames பள்ளிக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்த மோதலில் 18 வயது மதிக்கத்தக்க Hazrat Wali என்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த செவ்வாய் கிழமை பிற்பகல், Richard Upon Thames பள்ளிக்கு அருகில் உள்ள நடைபாதையில் நடந்த சண்டையில், 18 வயதான Hazrat Wali என்ற இளைஞன் உயிரிழந்தான்.
குறித்த இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய போது, அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இளைஞனைக் காப்பாற்ற போராடினார். அதற்காக அவர் CPR செய்தார், இது சம்பந்தமான வீடியோ மற்றும் புகைப்படங்களை யாரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் என்று பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏனெனில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம், கடும் வேதனையில் உள்ளது. உயிரிழந்த இளைஞனின் உறவினர் கூறுகையில், Hazrat Wali நல்ல பையன், அவர் ஆப்கானில் இருந்து இங்கு படிக்க வந்தார்.
இவருடைய குடும்பத்தினர் அனைவரும் ஆப்கானிஸ்தானில் உள்ளதாக கூறினார். சம்பவ தினத்தின் போது, உயிரிழந்த இளைஞனுக்கும், அங்கிருந்த மற்ற நபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்ட ஆசிரியர் உடனடியாக அங்கு சென்றார். ஆனால் அதற்கு வாக்குவாதம் முற்றி இளைஞன் கத்தியால் குத்தப்பட்டு கீழே விழுந்தான். உடனே ஆசிரியர் அவரைக் காப்பாற்ற போராடினார்.
ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை. இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து Richard Upon Thames பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மரணத்தைக் கேட்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.
இந்த சோகமான நேரத்தில் அந்த இளைஞனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் எங்கள் எண்ணங்கள் உள்ளன.
ரிச்மண்ட் அபான் தேம்ஸ் பள்ளியின் மாணவர் இல்லை என்றாலும், எந்த ஒரு இளம் உயிரையும் இழப்பது நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு சோகம் கத்தி குத்து என்பது லண்டனில் அளவில்லா பிரச்சனையாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சம்பவ தினமான செவ்வாய் கிழமை மாலை 4.45 மணிக்கு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் இளைஞனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவர் 5.54 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது நெருங்கிய உறவினர்களுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர்.
துப்பறியும் தலைமை ஆய்வாளர் Vicky Tunstall, இந்த சம்பவத்தை ஏராளமான மக்கள் பார்த்துள்ளனர்.
அவர்களில் சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. தயவு செய்து இந்த வீடியோவை பகிர வேண்டாம்.
அதற்கு பதிலாக, இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.