தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி

Chhattisgarh
By Balamanuvelan May 12, 2026 08:42 AM GMT
Report

இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணிப் பழம் சாப்பிட்ட 15 வயதுப் பையன் ஒருவன் உயிரிழந்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

தர்பூசணி சாப்பிட்ட சிறுவர்கள்

சமீபத்தில் மும்பையில் தர்பூசணி சாப்பிட்ட ஒரு குடும்பம் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் பரபரப்பை உருவாக்கியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், இந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள Ghurkot என்னும் கிராமத்துக்கு வெவ்வேறு கிராமங்களிலிருந்து உறவினர் பிள்ளைகள் வந்துள்ளார்கள். 

தர்பூசணி சாப்பிட்ட மூன்று சிறுவர்கள் உடல் நலம் பாதிப்பு: 15 வயது பையன் பலி | Teen Dies After Eating Water Melon In Chhatisgarh

தங்கள் மாமா வீட்டுக்கு வந்த அவர்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை, ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி ஒன்றை சாப்பிட்டுள்ளார்கள்.

சிறிது நேரத்தில் அகிலேஷ் திவார் (Akhilesh Dhivar, 15), ஸ்ரீ திவார் (Shri Dhivar, 4), பிண்டு திவார் (Pintu Dhivar, 12) மற்றும் ஹிதேஷ் திவார் (Hitesh Dhivar, 13) ஆகிய நால்வருக்கும் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டுள்ளது.

பிள்ளைகளின் நிலைமை மோசமாகவே, அந்தக் குடும்பத்தினர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். 

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து - என்ன காரணம்?

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து - என்ன காரணம்?

பிள்ளைகளை பரிசோதித்த மருத்துவர்கள், அகிலேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மற்ற மூன்று பிள்ளைகளும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலையிலேயே வெட்டி வைக்கப்பட்ட தர்பூசணி திறந்தே வைக்கப்பட்டிருந்ததால் அதில் கிருமிகள் பரவியிருக்கலாம் என்றும், அதை மாலையில் சாப்பிட்டதால் பிள்ளைகளுக்கு கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

உயிரிழந்த அகிலேஷின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அந்த தர்பூசணி மற்றும் வீட்டிலிருந்த மற்றொரு தர்பூசணி ஆகியவை ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சியை உருவாக்கியுள்ள இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US