பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழா: 17 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்
பிரித்தானியாவில் நடைபெற்ற இசை திருவிழாவில் 17 வயது சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசை திருவிழாவில் சோகம்
லேக் டிஸ்ட்ரிக்ட்(Lake District) பகுதியில் நடைபெற்ற கென்டல் காலிங்(Kendal Calling) இசைத் திருவிழாவில் பங்கேற்ற 17 வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவக் கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.13 மணிக்கு கும்ப்ரியாவில்(Cumbria) நடைபெற்ற இசைத் திருவிழாவில் ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக அவசர உதவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவரை மீட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி உயிரிழந்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையையும் பொலிஸார் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக, சிறுமி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட போது மீட்பு பணியாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்ற பெண்கள் குழுவினரை தொடர்பு கொள்ள விசாரணை அதிகாரிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |