லண்டனில் பட்டப்பகலில் பயங்கரம்! குழந்தை மற்றும் பெண் கண் முன்னால் குத்தப்பட்ட இளைஞன்: வெளியான சிசிடிவி காட்சி
லண்டனில் இளைஞர் ஒருவர் பரபரப்பு மிகுந்த சாலையில், கத்தியால் குத்தப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kent-ன் Gravesend-ல் இருக்கும் பரபரப்பு மிகுந்த சாலையில், முகமூடி அணிந்த படி இருந்த நபர் ஒருவர், இளைஞர் ஒருவரை விரட்டி விரட்டி கத்தியால் குத்துகிறார்.
அந்த இளைஞர் அவரிடம் இருந்து தப்பிக்க முயல்கிறார். அப்போது அங்கே கார் மற்றும் பெண், குழந்தையுடன் இருக்க, அவர்கள் கண்முன்னே இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உடனே கத்தியால் தாக்கிய நபர் கார் மற்றும் இவர்களை பார்த்தவுடன் தாக்குதலை விட்டு ஓடுகிறான். அதன் பின் மீண்டும் அந்த இளைஞனை கத்தியால் குத்துவதற்கு விரட்டுகிறான்.
இதில் அந்த இளைஞன் படுகாயமடைய, இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், இளைஞரை மீட்டு, லண்டனில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், கடந்த செவ்வாய் கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 12.47 மணியளவில், இளைஞன் ஒருவர் மற்றொரு நபரால் கத்தியால் தாக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்சுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த இளைஞனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். இந்த செயலில் ஈடுபட்ட நபரை தேடி வருகிறோம். யாரேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படியும், இது ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.