17 வயது இளைஞரின் ஆணுறுப்பை துண்டித்து அடித்துக் கொலை: பதிலுக்கு குடும்பத்தினரின் அதிர்ச்சி செயல்
பீகாரின் முசாபர்பூர் கிராமத்தில் தங்கள் குடும்பத்து பெண்ணை காதலித்ததாக கூறி 17 வயது இளைஞரின் ஆணுறுப்பை துண்டித்து அடித்துக் கொன்றுள்ளனர்.
குறித்த சம்பவம் அறிந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து, கொல்லப்பட்ட இளைஞரின் சடலத்தை பெண்ணின் குடியிருப்பு முன்பு சடங்குகளுடன் எரியூட்டியுள்ளனர்.
நடுங்க வைக்கும் இச்சம்பவம் முசாபர்பூர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. சவுரவ்குமார் என்ற 17 வயது இளைஞரே காதலித்ததாக கூறி கொடூரமாக கொல்லப்பட்டவர்.
இரவு வழக்கம் போல காதலியை காண அவளின் குடியிருப்புக்கு சென்ற சவுரவ்குமாரை குடும்பத்தினர் சேர்ந்து பிடுகூடியுள்ளனர்.
பின்னர் கொடூரமாக தாக்கியதுடன் ஆணுறுப்பையும் துண்டித்துள்ளனர். இதனால் ஆபத்துகட்டத்திற்கு சென்ற இளைஞரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் மருத்துவர்களால் காப்பாற்ற முடியாமல் போனது. இளைஞர் மரணமடைந்த தகவல் அறிந்து குடும்பத்தினரும் கிராம மக்களும் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
உடற்கூராய்வுக்கு பிறகு உடலை வாங்கிச் சென்ற குடும்பத்தினர், முக்கிய குற்றவாளியான சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்புக்கு முன்பு உரிய சடங்குகளுடன் எரியூட்டியுள்ளனர்.
அத்துடன், சுஷாந்த் பாண்டேவின் குடியிருப்பையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.