பள்ளியில் நடந்த கொடுமை: 5 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 15 வயது சிறுவன் கைது
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், தெற்கு மும்பையில் உள்ள பள்ளி வளாகத்தில் ஐந்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு பால்கர் மாவட்டத்தின் நலசோபரா பகுதியில் இருந்து 15 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்ததாக கூறப்படுகிறது..
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடினார், ஆனால் சிறுமி வீட்டுக்கு சென்று உடனடியாக தனது பெற்றோருக்கு நடந்ததை தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
பாந்த்ரா, கர், செம்பூர் மற்றும் நாக்பாடா போன்ற இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியதாகவும், சிறுவன் நலசோபராவில் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இது சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO) ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.