பிரித்தானியாவின் மிகவும் இளம்வயது கொலைகாரர்கள்... வெளிவரும் பதறவைக்கும் பின்னணி
பிரித்தானியாவின் Wolverhampton பகுதி பூங்காவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் பதறவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.
12 வயதான சிறுவர்கள் இருவர்
குறித்த கொலையை செய்த இரு 12 வயது சிறுவர்களும், பிரித்தானியாவின் மிகவும் இளம்வயது கொலைகாரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
தற்போது வெளியான கண்காணிப்பு கமெரா பதிவுகளில், 19 வயதேயான ஷான் சீசாய் என்ற இளைஞரின் கடைசி நிமிடங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று ஷான் சீசாய் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் ட்ராம் வண்டியில் பயணப்படுவதும், அதன் பின்னர் பூங்கா ஒன்றிற்கு நுழைவதும் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய பூங்காவில் வைத்தே 12 வயதான அந்த சிறுவர்கள் இருவர் கத்தியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். அந்த இருவரும் இன்று பிரித்தானியாவில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட மிகக் குறைந்த வயதுக் கொலைகாரர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஷான் அவரது நண்பர்கள் வட்டத்தில் இருந்து விலகிய நிலையிலேயே, தொடர்புடைய சிறுவர்கள் இருவரிடமும் சிக்கியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றனர். இரவு 8 மணிக்கு பூங்காவுக்குள் தனியாக சிக்கிய ஷான் மீது அந்த சிறுவர்கள் இருவர் கொலைவெறி தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
பின்னால் இருந்து குத்தப்பட்ட நிலையில், ஒரு சிறுவனின் நீளமான கத்தி ஷானின் இதயத்தை துளைத்துள்ளது. சம்பவத்தின் போது உடனிருந்த தமது நண்பர்கள் இருவரை அந்த சிறுவர்கள் இருவரிடம் இருந்து காப்பாற்றியதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கண்புரைக்கு சிகிச்சை பெறவே
இரு சிறுவர்களும் கொடூரமான முறையில் ஷானை தாக்கி கொலை செய்துள்ளனர். ஆயுதமில்லாத, தவறேதும் இழைக்காத ஒருவரை சிறுவர்கள் இருவரும் மிகக் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளதாக சட்டத்தரணி Michelle Heeley நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சிறுவர்கள் இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் தண்டனை குறித்த தகவல்கள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்றே கூறப்படுகிறது.
கரீபியன் தீவுகளில் உள்ள அங்கிலாவைச் சேர்ந்த ஷான் சீசாய், பர்மிங்காமில் உள்ள ஹேண்ட்ஸ்வொர்த்தில் வசித்து வந்தார். கண்புரைக்கு சிகிச்சை பெறவே அவர் பிரித்தானியாவுக்கு வந்ததாக அவரது தந்தை சுரேஷ் சீசாய் மற்றும் தாயார் மனேஷ்வரி சீசாய் தம்பதி தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |