ஜேர்மன் நகரில் பொம்மை துப்பாக்கியுடன் திரிந்த வாலிபருக்கு நேர்ந்த கதி!
ஜேர்மனியில் ஆயுதத்துடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிவதாக தகவல் கிடைத்தவுடன் பொலிசார் குவிந்தததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தெற்கு ஜேர்மன் நகரமான Lindau-வில் இச்சம்பவம் நடந்துள்ளது.
Lindau நகரில் உள்ள தெரு ஒன்றில் 15 வயது சிறுவன் ஒருவன், இராணுவ ஆடை அணிந்து துப்பாக்கியை கையில் ஏந்திய படி அங்கும் இங்கும் ஓடி திரிந்துள்ளான்.
இதைக்கண்ட உணவக உரிமையாளர் ஒருவர், சிறுவன் கையில் வைத்திருந்த பொம்மை துப்பாக்கியை உண்மையான ஆயுதமாக தவறாகப் புரிந்து கொண்டு பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவயிடத்தில் காவல்துறை வாகனங்களும் பொலிஸ் அதிகாரிகளும் குவிந்த பெரிய அளவிலான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.
வாலிபரை பிடிக்க பல ரோந்து கார்கள் மற்றும் மத்திய பொலிசார் சம்பவயிடத்தில் குவந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
சிறுவனை பிடித்த பொலிசாருக்கு, அவன் வைத்திருப்பது உண்மையான துப்பாக்கி இல்லை, அது பொம்மை துப்பாக்கி என்ற உண்மை தெரியவந்துள்ளது.
எனினும், பொம்மை துப்பாக்கி வைத்திருந்து பொதுஇடத்தில் பதட்டத்தை ஏற்படுத்தியதாக சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரிய செய்தி நிறுவனமான ஏபிஏ தெரிவித்துள்ளது.