பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை! கைப்பற்றப்பட்ட சடலம்
இந்திய மாநிலம் தெலங்கானாவில் பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் பாஜகவின் மூத்த மற்றும் முக்கிய தலைவர் ஞானேந்திர பிரசாத். இவர் மியா பூர் நகரில் ஒரு வீட்டில் சமீபகாலமாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாகவே ஞானேந்திர பிரசாத் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக மியா பூர் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்தபோது, பாஜக தலைவர் ஞானேந்திர பிரசாத் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
அதன் பின்னர் அவரது உடலை மீட்ட பொலிசார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஞானேந்திர பிரசாத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கியுள்ளார். அதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தலைவர் பதவியில் இருக்கும் அரசியல் பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.