எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை

Telangana Crime
By Sivaraj Jan 19, 2023 08:54 AM GMT
Report

இந்திய மாநிலம் தெலங்கானாவில் காப்பீட்டு பணத்திற்காக அரசாங்க ஊழியர் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசாங்க ஊழியர்

தெலுங்கானா மாநிலம் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மா நாயக். ஐதராபாத்தில் அரசு ஊழியராக பணியாற்றி வரும் இவர் சென்ற கார் கடந்த 9ஆம் திகதி எரிந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் இருந்து மீட்கப்பட்ட நபர் ஒருவரின் உடல் தன் கணவர் தான் என்று தர்மாவின் மனைவி நீலா கூறினார்.

அதனைத் தொடர்ந்து அவரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. அவர் அவசர அவசரமாக உடலை வாங்கிக் கொண்டு சென்றதும், பொலிஸார் முன்பு மட்டும் கண்ணீர் விட்டு அழுதது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

கோடிக்கணக்கான காப்பீட்டு தொகை

இதனால் பொலிஸார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது நீலா கணவரின் இறப்பு சான்றிதழை பெற்று உடனடியாக கோடிக்கணக்கான காப்பீட்டு தொகையை பெற முயற்சித்ததை கண்டுபிடித்தனர். பின்னர் அவரைப் பிடித்து செல்போனை ஆராய்ந்தபோது பொலிஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பூனாவில் தர்மா உயிருடன் இருப்பதும், அவருடன் நீலா பேசி வந்ததும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பூனாவுக்கு சென்ற பொலிஸார் தர்மாவை கைது செய்து தெலங்கானாவுக்கு அழைத்து வந்தனர்.

எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Telangana Govt Officer Arrested Who Murder Cheat

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

அதன் பின்னர் நடந்த விசாரணையில் பல உண்மைகள் தெரிய வந்தது. தர்மா சூதாட்டத்தில் சுமார் 2 கோடி வரை பணத்தை இழந்துள்ளார். அதனை மீட்க அவர் வழி தேடியபோது தான் காப்பீடு மூலம் 7 கோடி வரை பணம் கிடைக்கும் என்பதை அறிந்துள்ளார்.

ஆனால் தனது இறப்பிற்கு பின்னர் தான் அந்த பணம் கிடைக்கும் என்பதால், தன்னை போன்ற உருவமொத்த நபரை கொலை செய்து தான் இறந்துவிட்டதாக உலகை நம்ப வைக்க திட்டம் தீட்டியுள்ளார்.

இதற்காக பழைய கார் ஒன்றை வாங்கிய தர்மா, அதனை அனைவர்க்கும் தெரிய வைக்கும் விதமாக இனிப்புகளை சக ஊழியர்களுக்கு வழங்கியுள்ளார். பின்னர் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். அங்கு சென்றபின் தனது மனைவி நீலா, மகன், அக்கா சுனந்தா, அவருடைய மருமகன் ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் திட்டத்தை செயல்படுத்துமாறு கூறியுள்ளார்.

கார் ஓட்டுனர் கொலை

கார் ஓட்டுனர் பாபு என்பவரை ஸ்ரீனிவாஸ் அழைத்து வந்துள்ளார். அவருக்கு மொட்டை போட்டு, தர்மாவின் உடைகளை அணிவித்து வெங்கடாபுரத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கே சென்றவுடன் பாபுவை கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு, முன்னிருக்கையில் உட்கார வைத்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளனர். இந்த சம்பவங்களை தர்மா கூற பொலிஸார் அதனை வாக்குமூலமாக பெற்றுக் கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து தர்மா, மனைவி நீலா, மகன் உள்ளிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.   

எரித்துக் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட நபர்..வேறொரு ஊரில் கைது..அம்பலமான அதிர்ச்சி உண்மை | Telangana Govt Officer Arrested Who Murder Cheat

மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, உடுவில், Bochum, Germany, Scarborough, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, உடுத்துறை, Toronto, Canada

24 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, Vitry-sur-Seine, France

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

நுணாவில், கொச்சிக்கடை, நீர்கொழும்பு, Melbourne, Australia

19 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், தேவிபுரம்

21 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, பிரான்ஸ், France

24 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், London, United Kingdom

03 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sankt Ingbert, Germany

03 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, Toronto, Canada

15 Aug, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US