தாலி கட்ட அனுமதியில்லை! கோவிலில் திருநங்கை - திருநம்பி தம்பதி திருமணத்திற்கு மறுப்பு.. இறுதியில் சுபம்
கேரளாவில் மூன்றாம் பாலின தம்பதிகளின் திருமணத்திற்கு ஒரு கோவிலில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருநங்கை தம்பதி
பாலக்காட்டை சேர்ந்தவர்கள் நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா. திருநங்கை, திருநம்பியான இவர்கள் தாலி கட்டி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த நிலையில் அங்குள்ள கச்சம்குருஷி கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது.
இதற்காக பத்திரிக்கைகள் அச்சடித்து பலருக்கும் வழங்கினர், அதன்படி அத்வைகா பெற்றோர் உள்ளிட்ட 150 விருந்தினர்கள் திருமணத்திற்கு வந்தனர். ஆனால் திடீரென கோவில் நிர்வாகம், நீலன்கிருஷ்ணா - அத்வைகா திருமணத்தை நடத்த அனுமதி கொடுக்கவில்லை.
newindianexpress
திருமண மண்டபத்தில்
இதையடுத்து, கொல்லங்கோடு பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள செங்குந்தர் கல்யாண மண்டபத்தில் தாலிகட்டுதல் உள்ளிட்ட திருமண விழா சிறப்பாக நடைபெற்றது.
தம்பதி கூறுகையில், எல்லா சமூகத்தினரையும் போல திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ எங்களுக்கு உரிமை உண்டு. கோவிலில் தாலி கட்ட அனுமதிக்க மாட்டோம் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எதிர்காலத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க அனுமதி மறுத்ததாக எங்களிடம் தெரிவித்தனர் என கூறியுள்ளனர். நீலன்கிருஷ்ணா மற்றும் அத்வைகா ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
pngwing