ஜேர்மனியிலிருந்து இந்த நாட்டுக்கு மக்களை நாடுகடத்துதல் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
ஜேர்மனியிலிருந்து ஈரான் நாட்டுக்கு நாடுகடத்துதல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் இரண்டு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்கள்
ஈரானில், செப்டம்பர் மாதம், Mahsa Amini என்ற குர்திஷ் இனத்தவரான இளம்பெண் ஹிஜாப் அணியாததற்காக கைது செய்யப்பட்டார்.
அவர் பொலிஸ் காவலில் கொல்லப்பட்ட விடயம், உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஈரானில் மட்டுமின்றி பல நாடுகளில் மக்கள் அந்த பெண்ணுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்கள்.
நாடுகடத்தல் நிறுத்திவைப்பு
ஆகவே, இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஈரானுக்கு யாரையும் நாடு கடத்தவேண்டாம் என அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக பவேரியாவின் உள்துறை அமைச்சரான Joachim Herrmann தெரிவித்துள்ளார்.
ஆபத்தான நபர்கள் மற்றும் பயங்கர குற்றவாளிகள் ஆகியோரை மட்டும் நாடுகடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ள அவர், ஈரானில் நிலவிவரும் சூழல் குறித்து பெடரல் அரசு அவ்வப்போது தகவல்களை அளிக்குமாறும், அதன் அடிப்படையிலேயே மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.