தன் மனைவியைப்போலவே இன்னொரு இளம்பெண்ணைப் பார்த்த பிரித்தானியர் செய்த பயங்கர செயல்...
அழகிய இளம்பெண் ஒருவர் தன் மனைவியைப்போலவே இருப்பதால் ஆத்திரமடைந்த ஒருவர், அதனால்தான் தான் அந்தப் பெண்ணை கொடூரமாக கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இரட்டைக் கொலை
ஸ்கொட்லாந்தில் வாழும் ஆண்ட்ரூ (Andrew Innes, 52) பிலிப்பைன்ஸ் நாட்டவரும், தற்போது பிரிஸ்டலில் வாழ்ந்துவருபவருமான பென்னிலின் (Bennylyn Burke, 25) என்ற இளம்பெண்ணையும் அவரது மகளான ஜெலிகா (Jellica, 2)ஐயும் கொலை செய்தார்.
பொலிசாரிடம், அவர்களைத் தான் தனது சமையலறையில் புதைத்து வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டைக்கொலை பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர்களை கொலை செய்ததற்கான காரணத்தை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பயங்கர ஆத்திரத்தை ஏற்படுத்திய விடயம்
பென்னிலின் பார்ப்பதற்கு தன் மனைவியைப்போலவே இருந்ததாகவும், அவரது உடல் அச்சு அசலாக தனது முன்னாள் காதலி ஒருவருடைய உடலைப் போலவே இருந்ததாகவும் கூறிய ஆண்ட்ரூ, அவரைப் பார்க்கும்போது, தன்னை விட்டுப் பிரிந்து ஜப்பானில் வாழும் தன் முன்னாள் மனைவி செய்த மோசமான செயல்களும், தனது முன்னாள் காதலி ஒருவர் தன்னை பயங்கரமான நிலையில் விட்டுவிட்டு போனதும் நினைவுக்கு வந்ததாகவும், அதனால் பயங்கர ஆத்திரம் ஏற்படவே, தான் பென்னிலினைக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Image: Handout
இரண்டு வயது குழந்தையை ஏன் கொலை செய்தீர்கள் என்று கேட்டால், குழந்தை தன் அம்மாவைத் தேடியதாகவும், ஆகவே, அவளைத் தன் தாயுடன் அனுப்புவதுதான் சரி என தனக்குத் தோன்றியதால் அவளைக் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரூ.
ஆனால், வேறொரு சிறுமியையும் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வந்த ஆண்ட்ரூ, அந்தச் சிறுமியை தன் வீட்டில் கட்டிப்போட்டு, அவளையுயும், குழந்தை ஜெலிகாவையும் வன்புணர்ந்ததும் தெரியவந்துள்ளது. பென்னிலினைக் கொலை செய்ததையும், தன்னிடம் ஆண்ட்ரூ மோசமாக நடந்ததையும் அந்தச் சிறுமியே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.