குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதால் நபர் செய்த பயங்கர செயல்: நீதிமன்றத்தையே பரபரப்படைய செய்த சம்பவம்
அமெரிக்கர் ஒருவர் தான் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் North Dakota பகுதியில், பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர், பலரை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த வழக்குகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டார்.
வழக்குகளை விசாரித்த நிதிபதி, அந்த நபர் குற்றவாளி என தீர்ப்பளித்துவிட்டு நீதிமன்றத்தைவிட்டு வெளியேறிவிட்டார்.
BREAKING: The U.S. Marshals confirm one person is dead after an incident at the Federal Courthouse in downtown Fargo this afternoon. A witness tells VNL during his sentencing hearing, the male defendant stood up & slit his throat w/ what looked like a pen or a plastic shank. pic.twitter.com/azj0C3BLPU
— Bailey Hurley (@BaileyHurleyVNL) May 17, 2021
உடனே எழுந்த அந்த நபர், நீதிமன்றத்தில் ஊழியர்களும் மக்களும் இருக்கும் நிலையில், அவர்கள் முன்னிலையிலேயே பேனா போன்ற கூர்மையான ஒரு பொருளால் தன் கழுத்தை அறுத்துக்கொண்டார்.
மக்கள் பதற, பாதுகாப்பு அதிகாரிகள் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். ஆனாலும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். நீதிமன்றத்திலேயே குற்றவாளி ஒருவர் கழுத்தை அறுத்துக்கொண்டதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.