எரிபொருள் பிரச்சினையால் நாட்டில் தீவிரவாத போராட்டங்கள்... ஜேர்மன் உள்துறை அமைச்சர் எச்சரிக்கை
ஜேர்மனியில் நிலவும் எரிபொருள் பிரச்சினையால், நாட்டில் தீவிரவாத போராட்டங்கள் வெடிக்கக்கூடும் என ஜேர்மன் உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஜேர்மனியில் அதிகரித்துவரும் எரிபொருள் விலைவாசி தீவிரவாத போராட்டங்களுக்கு வழிவகுக்ககூடும் என்று எச்சரித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser, இந்த பணவீக்கத்தை போராட்டங்கள் நடத்துவதற்கு ஒரு காரணமாக தீவிரவாதக் குழுக்கள் பயன்படுத்திக்கொள்ளும் அபாயம் உள்ளது என்று கூறியுள்ளார்.
ரஷ்யா ஜேர்மனிக்கு வழங்கிவந்த எரிவாயு வழங்கலைத் துண்டித்ததைத் தொடர்ந்து, ஜேர்மனி எரிவாயு தட்டுப்பாட்டால் அவதியுற்றுவருகிறது.
ரஷ்யாவிலிருந்து வரும் எரிவாயு நிறுத்தப்பட்டதால், கோடையை சமாளிக்கத் தேவையான எரிபொருள் போதுமான அளவில் ஜேர்மனி வசம் இல்லை.
ஆகவே, இந்த எரிபொருள் தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொண்டு, தீவிரவாதக் கருத்துக்கள் கொண்டோர், வெறுப்பை விதைத்து நாட்டில் பிரிவினையை உருவாக்க வாய்ப்புள்ளது என ஜேர்மன் பெடரல் நெட்வொர்க் ஏஜன்சியின் தலைவரான Klaus Müllerம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Image: AP