நாவூறும் சுவையில் தக்காளி மோர் குழம்பு.., வெறும் 5 நிமிடத்தில் செய்யலாம்
இந்த சுவையான தக்காளி மோர் குழம்பை வெறும் 5 நிமிடத்தில் செய்யலாம். இதனை குழந்தைகள் கூட விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் தக்காளி மோர் குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- ½ ஸ்பூன்
- பச்சை மிளகாய்- 2
- காய்ந்த மிளகாய்- 2
- கறிவேப்பிலை- 1 கொத்து
- சின்ன வெங்காயம்- 6
- தக்காளி- 2
- மிளகாய் தூள்- ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- தயிர்- 2 கப்
செய்முறை
முதலில் ஒரு வாணலில் கடலை எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்துக்கொள்ளவும்.
கடுகு பொரிந்ததும் அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின் இதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். அடுத்து இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக அடுப்பை அணைத்த போன் சிறிதளவு தண்ணீர் மற்றும் தயிர் சேர்த்து கலந்தால் போதும் சுவையான தக்காளி மோர் குழம்பு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |