கனேடிய பெண் ஒருவரை துரத்தி துரத்தி அடித்த விதி... பெருவெள்ளத்துக்கு தப்பியோடும்போது நிகழ்ந்த பரிதாபம்
பட்ட காலிலே படும் என்றொரு சொல் வழக்கு உண்டு...
Goetz Young (32) என்ற கனேடிய பெண்ணை அதற்கு சரியான உதாரணமாகக் கூறலாம்.
சமீபத்தில்தான் தன் கணவரைப் பறிகொடுத்திருந்தார் Goetz. பிறகு, பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Langley என்ற இடத்திலிருந்து Merritt என்ற இடத்திலுள்ள தன் பெற்றோருடன் ஒரு புது வாழ்க்கையைத் துவங்கும் ஆசையுடன் தன் பிள்ளைகளான Ember (6) மற்றும் Hailey (5) ஆகியோருடன் குடிபெயர்ந்திருந்தார் அவர்.
ஆனால், நவம்பர் 15 அன்று மீண்டும் அவர் வாழ்வில் விதி விளையாடியது. பெருவெள்ளம் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்த அனைவரும் வெளியேறவேண்டிய நிலை உருவாக, Goetzம் பிள்ளைகளும் Kamloopsக்குச் சென்று அங்குள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கினார்கள். ஹொட்டலில் தங்குவதற்கான செலவு கையைக கடிக்க, மீண்டும் Lower Nicola என்ற இடத்தில் வாழும் ஒரு தோழியின் வீட்டுக்கு செல்வதென முடிவு செய்தார் Goetz.
அதன்படி தாயும் பிள்ளைகளுமாக புறப்பட, வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் சாலை மூடப்பட்டிருந்தது. ஆகவே, 97C நெடுஞ்சாலையைப் பிடித்து அதில் பயணித்துக்கொண்டிருந்தனர் Goetzம் அவரது பிள்ளைகளும்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, திடீரென கார் கட்டுப்பாட்டை இழக்க, சாலையில் உருண்ட அவரது கார் எதிரே வந்த ட்ரக் ஒன்றின்மீது சென்று மோதியுள்ளது.
காரிலிருந்து வெளியேறிய Goetz அலறி சத்தமிட, அவரது சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த சிலர் அவருக்கு உதவியிருக்கிறார்கள்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக காரில் Goetzஉடன் பயணித்த அவரது மூத்த மகளான Ember Young உயிரிழந்துவிட்டாள். இளைய மகள் Haileyயின் கை துண்டுதுண்டாக உடைய, Goetzன் கை விரல்களில் ஒன்று உடைந்துபோனது.
தன் மகளை இழந்த துக்கத்திலிருந்து மெல்ல விடுபட முயன்று வரும் Goetz, ஒரு ஆளால் இவ்வளவு இளம் வயதில் இத்தனை போராட்டங்களைத் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார். பல விடயங்கள் தவறாகப் போய்விட்டன. இது எப்படி என எனக்குப் புரியவில்லை என்கிறார் அவர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022