குழந்தைகள் விரும்பி உண்ணும் டீக்கடை தட்டு வடை.., எப்படி செய்வது?
இந்த சுவையான டீக்கடை தட்டை வடையை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்ணுவார்கள்.
அதுவும் மாலை பொழுதில் சூடான டீயுடன் இந்த தட்டை வடையை சாப்பிடும்போது அவ்வளவு நிறைவாக இருக்கும்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் டீக்கடை தட்டு வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம்- 2
- இஞ்சி- சிறிய துண்டு
- பச்சை மிளகாய்- 2
- மிளகாய் தூள்- ¼ ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
- கொத்தமல்லி- சிறிதளவு
- வேர்க்கடலை- 2 ஸ்பூன்
- தேங்காய் துண்டு- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- ரவை- ¼ கப்
- மைதா- ¼ கப்
- அரிசி மாவு- ½ கப்
- எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.
பின் இதில் மிளகாய் தூள், பொடித்த வேர்க்கடை, நறுக்கிய தேங்காய், உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிணைந்துகொள்ளவும்.
அடுத்து இதில் ரவை, மைதா, அரிசி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து ஐடித்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்த மாவை இலையில் எண்ணெய் தடவி தட்டி போடவும்.
இறுதியாக தட்டை நன்கு பொன்னிறமாக பொரிந்து வந்ததும் எடுத்தால் சுவையான டீக்கடை தட்டு வடை தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |