பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவனின் பரிதாப நிலை! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்
இந்தியாவில் பல்லி இறந்து கிடந்த குளிர்பானத்தை குடித்த சிறுவன் மயங்கி விழுந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ். இவர் பெயின்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா. இந்த தம்பதிக்கு 12 வயதில் பிரதீப் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் பிரதீப் இன்று காலையில் பக்கத்தில் உள்ள கடைக்கு சென்று 10 ரூபாய் கொடுத்து டிலோ கருப்பு கலர் குளிர்பானத்தை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் பிரதீப் குளிர்பானத்தை குடித்து விட்டு பாட்டிலை பார்த்த போது அடியில் இறந்த பல்லி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
குடித்து சில நிமிடத்தில் சிறுவன் தலை சுற்றி கீழே விழுந்துள்ளார். சிறுவன் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கியதை பார்த்து பதற்றம் அடைந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் சிறுவனை தூக்கி சென்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதைத்தொடர்ந்து பிரதீப்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிறுவனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலையை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர்.